Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இறுதி முடிவை தீர்மானித்தலும் பாதுகாப்பான இடத்தை சென்றடைதலும்.

தனது பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் மார்க்கத்தை ஒரு மனிதனால் மாற்ற முடியுமா?

மனிதனைப் பொறுத்தவரை அறிவைத் தேடுவதும், இப்பிரஞ்ச அத்தாட்சிகள் குறித்து ஆய்வு செய்வதும் அவனின் உரிமையாகும். இதற்காகவே அல்லாஹ் எமக்கு பகுத்தறிவைத்தந்து அதனை உரிய முறையில் பயன்படுத்துமாறு குறிப்பிடுகிறான். ஒவ்வொரு மனிதனும் தனது மூதாதையர்களின் மார்க்கத்தை குறித்து ஆய்வோ சிந்தனை செய்யாது மொத்தத்தில் பகுத்தறிவை உரிய முறையில் பயன்படுத்தாமலே கண்மூடித்தனமாக பின்பற்றுகிறான். இதனால் அல்லாஹ் அவனுள் வைத்திருக்கும் மாபெரும் அருளான பகுத்தறிவை அற்பமாகக்கருதி தனது ஆன்மாவுக்கு அநியாயம் இழைத்து தன்னையே சிறுமைப்படுத்திக் கொண்டவனாக மாறிவிடுகிறான்.

ஏகத்துவத்தை ஏற்ற குடும்பத்தில் வளர்ந்த எத்தனையோ முஸ்லிம்கள் சரியான பாதையை விட்டு விலகி அல்லாஹ்வுக்கு இணைவைப்போராக மாறியிருக்கிறார்கள். ஆனால் பல தெய்வக் கோட்பாட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் அல்லது திரித்துவத்தை நம்பிக்கைகொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பலர் இந்தக் கோட்பாடுகளை உதரித் தள்ளிவிட்டு ' லாஇலாஹ இல்லல்லாஹ் ' (உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை) எனும் திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாமிய கொள்கையை ஏற்றோர் பலர் உள்ளனர்.

பின்வரும் உருவகக் கதை இந்தக் கருத்தை விளக்குகிறது: ஒரு மனைவி தன் கணவனுக்காக ஒரு மீனை சமைத்தாள், ஆனால் அவள் அதை சமைப்பதற்கு முன்பு தலையையும் வாலையும் வெட்டினாள். தலையையும் வாலையும் ஏன் வெட்டினாய் என்று கணவன் கேட்டதற்கு. அவள், 'அப்படித்தான் என் அம்மா சமைப்பார்கள்.' அப்போது கணவர் தாயிடம், மீன் சமைக்கும் போது ஏன் வாலையும் தலையையும் வெட்டுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அம்மா, எனது அம்மா அப்படித்தான் சமைப்பார் என்றார். அப்போது கணவன் பாட்டியிடம் ஏன் தலையையும் வாலையும் வெட்டுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவள், 'எங்கள் வீட்டில் சமையல் பாத்திரம் சிறியதாக இருந்தது, பானையின் உள்ளே மீனைப் வைப்பதற்காகவே நான் தலையையும் வாலையும் வெட்ட வேண்டியிருந்தது.' என்று பதிலளித்தாள்.

உண்மையில் எமக்கு முந்தைய காலங்களில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் அக்காலத்திற்குரியவையாகவும் அக்கால காரணகாரியங்களுடன் பிணைக்கப்பட்டதாகவும் காணப்பட்டது என்பதே யதார்த்தமாகும். இதனை ஒரு வகையில் மேலே குறிப்பிட்ட கற்பனை கதை பிரதிபலிக்கலாம். இறந்த காலத்தில் வாழ்வதும், சூழல் வேறுபாடு மற்றும், கால மாற்றம் போன்றவை பற்றி சிந்திக்காமலும், கேள்வி கேட்காமலும் மற்றவர்களின் செயல்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் மிகப் பெரும் மனித அவலம் என்பதே உண்மை.

அல்லாஹ் கூறுகிறான் :

''எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை''. (அர்ரஃத்:11). تقدم

இஸ்லாத்தின் தூது சென்றடையாதோரின் நிலை என்ன?

இஸ்லாமியத் தூது கிடைக்கப் பெறாதோரை அல்லாஹ் ஒருபோதும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால் மறுமையில் அவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.

இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத மனிதர்களுக்கு எந்த நியாயமும் கிடையாது, ஏனென்றால் நாம் குறிப்பிட்டது போல, அவர்கள் அறிவைத் தேடுவதிலும் சிந்திப்பதிலும் கவனயீனமாக இருக்கலாகாது. மேலும் இஸ்லாமியக் கொள்கை சரியானது எனும் சான்று நிறுவப்படுவதும் அதை திட்டப்படுத்திக் கொள்வதும் சிரமம் என்றிருப்பினும் ஒவ்வொரு நபரும் இந்த விடயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டவர்கள். அறியாமை அல்லது சரியான சான்று கிடைக்காமை போன்றவற்றிற்கான முடிவு மறுமையில் இறை நாட்டத்துடன் தொடர்பான விடயமாகும். இவ்வுலகத்தீர்ப்புகள் யாவும் அவை வெளிப்படையான அம்சங்களைப் பொறுத்ததாகும்.

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கும் பகுத்தறிவு, இயற்பூக்கம், தூதுத்துவம், இப்பிரபஞ்சத்திலும் அவர்களுக்குள்ளேயும் காணப்படுகின்ற அத்தாட்சிககள் ஆகியவற்றின் மூலம் நிறுவப்பட்ட சான்றாதாரங்களுக்குப் பின்; அவர்களின் மீது தண்டனை விதித்திருப்பதில் எவ்வித அநியாயமும் கிடையாது என்பதை அறிவுள்ளோர் உணர்வர். அல்லாஹ்வை அறிந்து அவனை ஒருவனாக ஏற்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளை கடைப்பிடித்து ஓழுகுவதே இவையனைத்திற்கு ஈடாக அவர்கள் செய்ய வேண்டிய குறைந்த பட்ச விடயமாகும். அப்படிச் செய்தால், அவர்கள் நித்திய நரக வாழ்விலிருந்து காப்பாற்றப்பட்டு, இம்மையிலும் மறுமையிலும் மகிழ்சியை- சுகத்தை- அனுபவிப்பார்கள். இது கடினமான ஓரு விடயம் என்று நீர் நினைக்கிறீரா?

அல்லாஹ் படைத்த அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை அவனை மட்டுமே வணங்குவதாகும். அல்லாஹ் தனது அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை, தனக்கு எதனையும் இணைவைக்காதவர்களை தண்டிக்காமல் இருப்பதாகும். ஆக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்வது ஒரு இலகுவான விடயம், அது எப்படி? ஒரு நபர் கூறும் சில வார்த்தைகள் அதனை உரிய முறையில் விசுவாசித்து அதன் படி செயலாற்றுவதாகும். இதனை செய்வதே நரகத்திலிருந்து பாதுகாப்புப்பெற போதுமான விடயமாகும். இது ஒரு நீதியான விடயம் என்பதை புரிந்து கொண்டீர்களா? சர்வவல்லமையுள்ள, நீதியுள்ள, மென்மை நிறைந்த, எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் தீர்ப்பு இதுவாகும். ஆகவே இஸ்லாமிய மார்க்கமென்பது தூய்மை மிக்கவனும் உன்னதமானவனுமான அல்லாஹ்வின் மார்க்கமாகும். அதனை ஏற்று சுபீட்சமாய் ஈருலகிலும் வாழ முயற்சிப்போமாக!.

உண்மையான பிரச்சினை ஒரு நபர் தவறு செய்தாலோ அல்லது பாவம் செய்தாலோ கிடையாது. ஏனென்றால் தவறு செய்வது மனிதர்களின் இயல்பு. ஒவ்வொரு மனிதனும் தவறு செய்வோராவர். தவறு செய்பவர்களில் சிறந்தோர் மனந்திருந்தி வாழ்வோர் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், பாவங்களைச் செய்வதில் எல்லை கடந்து சென்று அதில் விடாப்பிடியாக இருப்பதில்தான் பிரச்சினை இருக்கிறது. தவறு அல்லது குறை என்னவென்றால் அறிவுரை கூறப்பட்டும் அதற்கு செவிசாய்க்காது, அதன் படி செயலாற்றாது இருப்பதாகும். நினைவூட்டப்பட்டு அந்த நினைவூட்டலால் பயனடையாது இருப்பதுமாகும். அல்லது அறிவுரை கூறப்பட்டு அதனை எடுத்து நடக்காது, படிப்பினை பெறாது இருப்பதும், மனந்திருந்தி வாழாது, இறை மன்னிப்புக்கோராது பிடிவாதத்துடன் கர்வம் கொண்டு நிராகரித்து விடுவதுமே மிகவும் இழிவான விடயமாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

''நமது வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவனது இரு காதுகளிலும் செவிட்டுத்தன்மை இருப்பது போன்று, அதை அவன் கேட்காதவனாகப் பெருமையடித்து, புறக்கணித்துச் செல்கின்றான். நோவினை தரும் வேதனையைக் கொண்டு நபியே நீர் அவனுக்கு நன்மாரயம் கூறுவாராக''. (லுக்மான் : 7). تقدم

வெற்றிக்கும் மீட்சிக்குமான வழி என்ன?

ستأتي ترجمته، وليس هذا مكانها

ஆக வாழ்க்கைப்பயணத்தின் சிறப்பான மற்றும் பாதுகாப்பான முடிவும் மீட்சிக்கான சிறந்த வழியும் பின்வரும் இறைவசனங்களில் சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான் :

"பூமி தன் இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்; வினைச் சுவடிகள் கொண்டு வந்து வைக்கப்படும், இறைத்தூதரும் அனைத்துச் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். மக்கள் மத்தியில் முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் புரிந்திருந்த செயல்களுக்கேற்ப முழுமையான கூலி வழங்கப்படும். மக்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக் கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென் பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களா கவும் உங்களிடம் வரவில்லையா? என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) உண்மையில் அவர்கள் (வந்தார்கள்) என்று கூறுவார்கள்; எனினும் வேதனை வாக்கு நிராகரிப்பாளர்கள் மீது உண்மையாகி விட்டது. நரகத்தின் வாயில்களால் நீங்கள் நுழையுங்கள் என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பெருமையடிப்போரின் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும். தம் இரட்சகனுக்கு அஞ்சியோர் சுவர்க்கத்தின்பால் கூட்டங் கூட்டமாகக் கொண்டு வரப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: 'உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் நல்லவிதமாக இருங்கள். என்றென்றும் நிரந்தரமாக தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்(என்று அவர்கள் கூறுவார்கள்). தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்த, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி மிகவும் சிறந்ததாகும்". (அஸ்ஸுமர்: 69-74). تقدم

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை என்று சான்று பகர்கின்றேன்.

மேலும், நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனது அடியாரும் தூதருமாவார் என்றும் சான்று பகர்கின்றேன்.

அல்லாஹ்வின் தூதர்கள் உண்மை என சாட்சி கூறுகிறேன்.

சுவர்க்மும் நரகமும் உண்மையானவை என சாட்சி கூறுகிறேன்.