Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

படைப்பாளியின் கருணை :

இறைவன் இஸ்லாத்தில் உள்ள தனது அடியார்களை நேசிக்கிறான், எனவே அவன் அவர்களை தனிமனிதத்துவ (Individualism) வழிமுறையை பின்பற்ற ஏன் அனுமதிக்கவில்லை ? (தனிமனித நலன்களைப் பாதுகாப்பதை ஒரு அடிப்படை விஷயமாக தனிமனிதவாதம் கருதுகிறது, அதே நேரத்தில் சமூகம் அல்லது அரசாங்கம் போன்றவற்றால் தனிநபரின் நலன்களில் எந்தவொரு வெளிப்புற தலையீட்டையும் அது எதிர்க்கிறது). تقدم في رقم 1857

அல் குர்ஆனில், இறைவனின் கருணையையும், அடியார்கள் மீது கொண்ட அன்பையும் குறிக்கும் பல வசனங்கள் உள்ளன. இருப்பினும், இறைவன் தம்முடைய அடியானிடம் அன்பு செலுத்துவது மக்கள் தங்களுக்கு மத்தியில் அன்பு பாராட்டிக்கொள்வது போன்றது அல்ல. ஏனென்றால் மனித அளவுகோளின் படி ஒரு காதலன் தான் இழந்த தேவையை காதலியிடமே பெற்றுக்கொள்கிறான். ஆனால் அல்லாஹ், எம்மில் எவ்விதத் தேவையுமற்றவன். அவன் நம்மீது கொண்ட அன்பானது பாசமும் அருளுமாகும். பலமானவன் பலவீனமானவனை விரும்புவது, வசதி படைத்தவன் ஏழைகள் மீது நிறைந்த அன்பு காட்டுவது, ஒரு பலசாலி ஆதரவற்றவரிடம் அன்பு காட்டுவது போன்ற நிலைக்கு ஒப்பானதாகும்.

எமது குழந்தைகளை நேசிக்கிறோம் என்ற அடிப்படையில் அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்குவோமா? எமது குழந்தைகளை நாம் நேசிக்கிறோம் என்பதனால் அவர்களை யன்னலினூடகாப் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதையோ, அல்லது திறந்த மின்னோட்டமுள்ள கம்பிகளைப் பிடித்து விளையாடவோ அனுமதிப்போமா?

நாட்டின் நலன்கள், சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், மதக் கருத்துகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, தனி நபரை முதன்மையாகக் கவனத்தில் கொண்டு, தனிப்பட்ட நன்மை மற்றும் மகிழ்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனிநபர் முடிவுகள் எடுக்க முடியாது. அத்துடன் ஒருவர் தன் பாலினத்தை மாற்றிக் கொள்வதற்கும், விரும்பியதைச் செய்வதற்கும், ஆடை அணிந்து கொள்வதற்கும், பாதை பொதுவானது என்று சாக்குப் போக்கு கூறி அவர் விரும்பும் விதத்தில் நடந்துகொள்ளும் இப்போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருவர் ஒரு வீட்டில் அவரின் ஏனைய பல நபர்களுடன் கூட்டாக –ஒன்றாக- வசிக்கிறார் என்றால், அந்த வீடு அனைவருக்கும் சொந்தமானது என்ற அடிப்படையில், அந்த வீட்டின் அறையொன்றை தனது இயற்கைத் தேவைக்காக பயன்படுத்துவது போன்ற தகாத நடத்தையில் ஈடுபடுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறான ஒரு வீட்டில் வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாது வாழ்வதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா? ஆகவே கட்டற்ற சுதந்திரத்தைப் பெற்ற மனிதன் ஒரு அசிங்கமான மனிதனாக மாறி விடுகிறான். இவ்வாறான சுந்திரத்தித்தை அனுபவிப்பதற்கு அவனால் ஒரு போதும் முடியாது என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

தனிமனிதனின் அதிகாரம் அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், தனிமனிதத்துவம் (Individualism ) என்பது கூட்டு அடையாளத்திற்கு மாற்று அடையாளமாக இருக்க முடியாது. சமூகத்தின் உறுப்பினர்கள் என்போர் பல படித்தரங்களை உடையயோர் ஆவர். அவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரை சார்ந்து இருப்பதுடன், ஒருவர் மற்றவரில் தேவையுடையோராகவும் உள்ளனர். அந்த வகையில சமூக உறுப்பினர்களில் சிலர் இராணுவ வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற பாத்திரங்களை வகிக்கின்றனர். இவர்களில் எவரேனும் தங்கள் சொந்த மகிழ்ச்சியை அடைவதை மாத்திரம் பிரதானமக் கொண்டு மற்றவர்களை புறக்கணித்து நடக்க முடியுமா?

தனிநபர்கள் தங்கள் உணர்ச்சியை கட்டவிழ்த்துவிடும் போது, அவர்கள் அதற்கு அடிமைகளாக மாறுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து அதனை மிகைக்கும் எஜமானர்களாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். அது மாத்திரமின்றி மனிதர்கள் தங்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்துவதில் புத்திசாலியாகவும், பகுத்தறிவு உள்ளவராகவும், திறன் படைத்தவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். இதன் மூலம் உணர்ச்சியை முடக்கி செயலிழக்கச் செய்திட வேண்டும் என்பது அர்த்தமல்ல. மாறாக ஆன்மீக உயர்வின் பால் சரியான வழிமுறையினூடாக இதனை வழிப்படுத்துவதே இதன் உயர் குறிக்கோளாகும்.

தனது பிள்ளைகளுக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும், எதிர்காலத்தில் கல்வி ரீதியாக உயர் அடைவொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பிள்ளைகள் படிப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஒரு தந்தை வற்புறுத்தின், இவ்வாறான ஒரு தந்தையை கொடுமை நிறைந்த தந்தையாக கருதுவோமா? இல்லை என்பதே இதற்காகான பதிலாகும. அதே போல் ஒரு மனிதன் தான் நினைத்த விதத்தில் தான்றோண்டித்தனமாக எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இவ்வுலகில் வாழ முடியாது என்பதே யதார்த்தமாகும்.

படைப்பாளனான அல்லாஹ் தனது அடியார்களுடன் மகா கருணையாளனாக உள்ளான் என்றால் ஏன் ஒரு தனிநபரின் ஒரு பாலின பாலியல் விருப்பங்களை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை?

அல்லாஹ் கூறுகிறான் :

"லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார். இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்' இவர்கள்தாம் மிக்க பரிசுத்தமான மனிதர்களாயிற்றே' என்று கூறியதைத் தவிர வேறெதுவும் அவரது சமூகத்தாரின் பதிலாக இருக்கவில்லை''. (அல்-அராஃப்: 80-82). تقدم

இந்த வசனம் ஓரினச்சேர்க்கை மனித மரபியலாக வந்த விடயமல்ல என்பதையும், இது மனித மரபணு குறியீட்டின் ஒரு பகுதியுமல்ல என்பதனையும் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் லூத் சமூகமே இந்த வகையான ஈனச் செயலில் முதலில் ஈடுபட்டுள்ளனர். இது பாலியல் விலகலான ஓரிணச்சேர்க்கைக்கும் மரபியல் பரம்பரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரந்த அறிவியல் ஆய்வுகளுடன் ஒத்துப்போகிறது. (அல்குர்ஆன்,அஸ்ஸுன்னா கூறும் அறிவியல் அற்புதங்களுக்கான அல் கஹீல் கலைகளஞ்சியம் (https://kaheel7.net/?p=15851)). تقدم

திருடனின் திருடும் விருப்பத்தை-ஆர்வத்தை –( Interests) நாம் ஏற்று மதிக்கிறோமா? இதுவும் ஒரு வகை ஆர்வமே, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், இது ஒரு இயற்கைக்கு மாறான ஆர்வ- நிலையாகும். இது மனித இயல்புக்கு எதிரானதும், இயற்கை ஒழுங்கை மீறுகிற விடயமுமாக இருப்பதால், இது நெறிப்படுத்தப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.

இறைவன் மனிதனை படைத்து சீறான வழியையும் காண்பித்துக் கொடுத்துள்ளான். அந்தவகையில் மனிதன் நன்மை மற்றும் தீமையின் பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவனுக்கு உண்டு.

அல்லாஹ் கூறுகிறான் :

"நாம் அவனுக்கு நன்மை தீமை எனும் இரு பாதைகளை காட்டிக்கொடுத்தோம்'' (அல்-பலத்: 10). تقدم

எனவே, ஓரினச்சேர்க்கையைத் தடைசெய்யும் சமூகங்களில் இயற்கைக்கு மாறான இச்செயற்பாடு அரிதாகவே வெளிப்படுத்துவதைக் காண்கிறோம், அதே சமயம் அத்தகைய நடத்தையை அனுமதித்து ஊக்குவிக்கும் சூழல்களில் ஓரினச்சேர்க்கையாளர்களின் விகிதம் மற்றும் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காண முடிகிறது. மனிதர்களிடத்தில் காணப்படும் இயற்கைக்கு மாறான இச்செயற்பாட்டை சாத்தியப்படுத்துவதை தீர்மானிப்பது அவர்களைச் சுற்றியுள்ள சூழழும் போதனைகளுமே என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

உதாரணத்திற்கு, தொலைக்காட்சியை கண்டுகழித்தல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் அல்லது குறிப்பிட்ட கால் பந்து விளையாட்டுக் குழு மீதான பற்று ஆகியவற்றின் அடிப்படையில் மனித அடையாளம்- ஆளுமை- நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து மாற்றத்திற்குட்படுகிறது. எனவே உலகமயமாக்கலானது அவர்களை சிக்கல் நிறைந் மனிதர்களாக கட்டமைத்துள்ளது என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இன்று துரோகி ஒரு கருத்தியலாளனாகவும், நடத்தை கெட்டவன் (ஓரினச்சேர்கையாளன்) சாதாரண சீரிய நடத்தை கொண்ட ஒருவனாகவும் மாறிவிட்டனர். அவர்கள் தற்போது பொது வெளியில் விவாதங்களில் பங்கேற்க சட்டப்பூர்வ உரிமையைப் பெற்றுள்ளனர். ஆகையால் நாம் அவர்களை ஆதரித்து சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது!. தொழில்நுட்பத்தை கையகப்படுத்தி வைத்திருப்போரிடமே இப்போது ஆதிக்கமும் அதிகாரமும் காணப்படுகிறது. அந்த வகையில் வக்கிர நடத்தை உடையோரிடத்தில் அதிகாரம் இருப்பின், அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை மற்ற தரப்பினரின் மீது திணிப்பர். இது ஒரு நபர், தன்னுடனும் தன் சமூகம் மற்றும் படைப்பாளனுடனான தனிப்பட்ட உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வழிகோலும். தனிமனிதத்துவம் (Individualism) ஆனது நேரடியாக பாலியல் நெறிபிறழ்வுடன் ((Paraphilia)) இணைவதானது, மனித இனம் சார்ந்த உள்ளார்ந்த மனித இயல்பு மறைந்து, பாரம்பரிய குடும்பம் என்ற கருத்து சரிந்து போவதற்கு காரணமாய் அமைந்து விடும். இந்தக் கருத்தியலின் தொடர்ச்சியானது சமகால மனிதர்களின் சாதனைகளையும், குடும்பம் என்ற கருத்தையும் வீணடித்துவிடும் என்பதால், மேற்குலகம் தனிமனிதவாதத்தை ((Individualism) முறியடிக்கத் தீர்வுகளைத் தேடத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, சமூகத்தில் மக்கள்தொகை குறைவடைதல் பிரச்சினையை மேற்கு நாடுகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. இது புலம்பெயர்ந்தோரை தருவிப்பதற்கான கதவுகளைத் திறக்க வழிவகுக்கிறது. இறை நம்பிக்கையும், அவன் நமக்காக உருவாக்கிய பிரபஞ்ச விதிகளை மதித்து நடப்பதும், அவனுடைய ஏவல் விலக்கல்களை கடைப்பிடித்து ஏற்று வாழ்வதுமே இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சிக்கான பாதையாகும்.