Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

கஃபா மற்றும் ஏனைய சின்னங்களை புனிதப்படுத்துவதிதினூடாக ஹஜ்ஜின் சடங்குகள் உருவ வழிபாடுகளுக்குரிய கிரியைகளை கொண்டதாக கருதமுடியாதா?

சிலைவழிபாட்டு மதங்களுக்கும் குறிப்பிட்ட சில இடங்கள், மற்றும் சடங்குகளை சிறப்பிப்பதற்குமிடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. அவை மத அல்லது தேசிய அல்லது கலாச்சாரமாக இருந்தாலும் சரியே!

உதாரணமாக, ஹஜ்ஜின் போது ஜமராத்துக்ளில் கல்லெறிவது, ஷைத்தனுக்கு முரண்படுவதையும் அவனைப் பின்பற்ற மறுப்பதையும் காட்டுகிறது. மற்றும் நமது நபி இப்ராஹிம் (ஆபிரகாம்) அவர்களின் செயலைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது. தனது இரட்சகனின் கட்டளைப்படி மகனை பலியிடுவதை ஷைத்தான் தோன்றி தடுக்க முயற்சித்தான். அப்போது இப்ராஹிம் நபி ஷைத்தானுக்கு கூழாங்கற்களால் கல்லெறிந்தார். இதனையே முஸ்லிம்கள் ஒரு கிரியையாக நிறைவேற்றுகின்றனர். (இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸ் முஸ்தத்ரக் ஹாகிமிலும் இப்னு குஸைமாவின் ஸஹீஹிலும் பதிசெய்யப்பட்டுள்ளது). இதேபோன்று, ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே ஓட்டமும் நடையுமாக செல்லும் வணக்கமுமாகும். தனது மகன் இஸ்மாயிலுக்காக அன்னை ஹாஜர் தண்ணீரைத் தேடி இரு மலைக்கிடையில் அவர்கள் ஓடியமையை நினைவு கூறும் ஒரு செயல். இதனை ஹஜ் மற்றும் உம்ராவின் போது நிறைவேற்றும் ஒரு கடமையாக இஸ்லாம் விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளும் அல்லாஹ்வை நினைவு கூறுவதையும், அகிலங்களின் இரட்சகனுக்கு அடி பணிந்து வழிபடுதலையும் குறித்துக்காட்டுவதுடன் அதனையே இலக்காகவும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் கற்களையோ, இடங்களையோ அல்லது தனி நபர்களையோ வணங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதே வேளை வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தினதும் இரட்சகனும், எல்லாவற்றையும் படைத்தவனும், அவற்றின் இறையாண்மையும் கொண்ட ஒரே கடவுளை வணங்குவதற்கு இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. تقدم

'முஸ்லிம் ஹஜருல் அஸ்வதை வணங்காதிருப்பின் அதனை ஏன் முத்தமிடவேண்டும்?. குறிப்பு: கறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود‎) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள கஃபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும். இந்தக் கல் (முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபியினால் கிபி 605 ஆம் ஆண்டு கஃபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது. முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் கஃபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள். ((விகிபீடியா).

உதாரணத்திற்கு தனது தந்தையிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதத்தின் உரையை ஒரு நபர் முத்தமிடுகிறார் என்றால் அவரை நாம் குறைகூறுவோமா? மாட்டோமல்லவா?! இதே போன்றுதான் ஹஜருல் அஸ்வத் கல்லின் நிலையும் என்பதையும் மனம் கொள்ள வேண்டும்.! ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளும் அல்லாஹ்வை நினைவு கூறுவதையும், அகிலங்களின் இரட்சகனுக்கு அடி பணிந்து வழிபடுதலையும் குறித்துக்காட்டுவதுடன் அதனையே இலக்காகவும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் கற்களையோ, இடங்களையோ அல்லது தனி நபர்களையோ வணங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. (هذه الترجمة متكررة. ينظر : 1839) அதே வேளை வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தினதும் இரட்சகனும், எல்லாவற்றையும் படைத்தவனும், அவற்றின் இறையாண்மையும் கொண்ட ஒரே கடவுளை வணங்குவதற்கு இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. هذا أيضا متكرر. ينظر رقم 1840)

அல்லாஹ் கூறுகிறான் :

‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றேன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்). (அல் அன்ஆம்: 80). تقدم

கடும் நெரிசல் காரணமாக சில முஸ்லிம்கள் மரணிப்பதற்கு வாய்ப்புல்லதால் ஹஜ் ஒரு பயங்கரமான வணக்கம் -கிரியை- என்று கருதப்படாதா?

ஹஜ்ஜில் நெரிசல் காரணமாக குறிப்பிட்ட சிலவருடங்களில் மாத்திரமே மரணசம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வழமையில் நெரிசல் காரணமாக மரணமடைவோரின் தொகை மிகவும் குறைவானதாகும். ஆனால் உதாரணத்திற்கு குறிப்பிடுவோமாயின் நாம் மது அருந்துவதன் விளைவாக இறக்கும் நபர்களை கணக்கிட்டால் அவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பல மில்லியன்கலாகும். அதுமாத்திரமின்றி தென் அமெரிக்காவில் கால்பந்து அரங்கங்கள் மற்றும்; திருவிழாக்களில் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை இதை விட அதிகமாகும்! என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். எப்படியிருந்தாலும், மரணம் தவிர்க்க முடியாத மாபெரும் உண்மையாகும், இறைவனை சந்திப்பது அது போன்ற உண்மையாகும். ஆகவே பாவத்தில் இறப்பதை விட நற்காரியத்தில் இறப்பது மிகவும் சிறந்தல்லவா!

மால்கம் எக்ஸ் கூறுகிறார்:

'இந்த பூமியில் எனது இருபத்தி ஒன்பது வருட வாழ்க்கையில் முதன்முறையாக, நான் எல்லாவற்றையும் படைத்தவன் முன் நின்று, ஒரு முழுமையான மனிதனாக இருப்பதை உணர்ந்தேன். அதே போன்று எல்லா நிறத்தவரும், இனங்களும் சங்கமமாகி ஓரிடத்தில் அணிதிரண்டு உண்மையான சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு சமூகத்தை நான் கண்டதில்லை. அமெரிக்கா இஸ்லாத்தை புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இனவெறிப் பிரச்சினைக்கான யதார்த்தமான தீர்வை தன்னகத்தே கொண்ட ஒரே மதமாக இஸ்லாம் மாத்திரமே திகழ்கிறது' (இவர் ஆபிரிக்க இனத்தை சேர்ந்த அமெரிக்க இஸ்லாமிய போதகர். மற்றும் மனித உரிமைகள் போராளி, அமெரிக்காவில் இஸ்லாமிய இயக்கத்தின் போக்கை சரிசெய்து, சரியான இஸ்லாமிய கொள்கையின் பால் அழைப்பு விடுத்தவர்). تقدم