Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

ஒரு முஸ்லிம் தினமும் ஜவேளை தொழுவது ஏன்?

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை பின்பற்றுபவன் என்ற வகையில் தனது தூதரும் தீர்க்கதரிசியுமான முஹம்மத் தொழுதது போன்று தொழுவான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "நான் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்". (ஆதாரம் : புஹாரி). تقدم

'முஸ்லிம் தான் நாள் முழுவதும் அல்லாஹ்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்தால்-ஆர்வத்தால் உந்தப்பட்டிருப்பதால், தொழுகையின் மூலம், ஒரு நாளைக்கு ஐந்து முறை தனது இறைவனுடன் உறவாடுகிறான். இது எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்புகொள்வதற்கு அவன் வழங்கிய வழிமுறையாகும். மேலும் இதனை கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என நமக்கு கட்டளையிட்டது எமது நலனுக்காகவே'.

அல்லாஹ் கூறுகிறான் :

"(நபியே! குர் ஆனாகிய) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதுவீராக, தொழுகையும் (அல்லாஹ் விதியாக்கியவாறு) நிறைவேற்றுவீராக, நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டதிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவுகூர்வது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரியதாகும், இன்னும், நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான்". (அன்கபூத் : 45). تقدم

நாம் மனிதர்கள் என்ற வகையில் எமது மனைவிமார்கள் மற்றும் குழந்தைகளுடன் தினமும் தொலைபேசியினூடாக பேசுவதை ஒரு போதும் நிறுத்திக்கொள்வதில்லை. காரணம் அவர்கள் மீதுள்ள அதீத இரக்கமும் இறுக்கமான தொடர்புமாகும்.

தொழுகை மானக்கேடான தவறுகளில் ஈடுபடுவதைத் தடுத்து நல்ல செயல்களைச் செய்யத் தன்னைத் தூண்டும். இவை தொழுகையின் முக்கியத்தை தெளிவாக எடுத்துகாட்டுகிறது. அதாவது ஒருவர் தன்னை படைத்த இறைவனை நினைவுகூர்ந்து அவனின் தண்டனையை பயந்து அவனின் மன்னிப்பிலும், வெகுமதியிலும் ஆசைகொள்ளும் போது இந்நிலை ஏற்படும்.

அதே போல் மனிதனின் செயற்பாடானது அகில உலக இரட்சகனுக்காக மாத்திரம் இதய சுத்தியுடன் மனத் தூய்மைபேணி செய்தல் வேண்டும். ஏனெனில் மனிதனைப் பொறுத்தவரை அவனின் பலவீனங்களின் படி எப்போதும் அவனை நினைவு கூர்வதற்கோ அல்லது எண்ணத்தைப் புதுப்பித்துக்கொள்வதற்கோ சிரமமான விடயமாகும். எனவே, அகிலங்களின இரட்சகனுடன் தொடர்பு கொள்ளவும், வழிபாடு மற்றும் செயல்ற்பாடுகளினூடாக தனது பற்றுறுதியை- விசுவாத்தை புதுப்பித்துக்கொள்ளவதற்கும் தொழுகைக்கான நேரங்கள் இருப்பது அவசியம். இந்த நேரங்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம், தினமும் பகல் மற்றும் இரவில் ஐந்து குறிப்பிட்ட நேரங்களாகும். அவைகளாவன (ஃபஜ்ர், லுஹ்ர், அஸ்ர்,மஃ;ரிப் மற்றும் இஷா) இவை கால சுழற்சியையும் ஒவ்வொரு தொழுகைக்குமிடையில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளையும் பிரதிபலிக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான் :

"ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தி அடையலாம்". (தாஹா :130). تقدم

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்ட சூரிய உதயத்திற்கு முன்னும் சூரியன் மறைவதற்கு முன்னரும் என்பது பஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளையும்

இரவு வேளைகளில் என்பது இஷாத் தொழுகையையும்

பகலின் ஓரங்களில் என்பது லுஹ்ர் மற்றும் மஃரிப் தொழுகைகளையும் குறிக்கிறது.

பகலில் நிகழும் இயற்கை மாற்றங்களை உள்ளடக்கியதும், இந்த மாற்றங்களை நிகழ்த்துவோனை நினைவுகொள்வதற்குமான ஐந்து தொழுகைகளாகும்.

முஸ்லிம்க்கள் மக்கா திசையை நோக்கித் தொழுவது ஏன்?

'அல்லாஹ்; புனித ஆலயமான கஃபாவை முதல் வழிபாட்டு தளமாகவும், விசுவாசிகளின் ஒற்றுமையின் அடையாளமாகவும் ஆக்கினான். இது தொழுகையின் போது அனைத்து முஸ்லிம்களும் முன்னோக்கும் திசையாகும். மக்காவை மையமாகக் கொண்டு இந்தப் பூமியில் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இதனைச்சூழ இணைகின்றனர். இறை வழிபாட்டாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் பல காட்சிகளை குர்ஆன் நமக்கு முன்வைக்கிறது. இதற்கு நபி தாவூதுடன் மலைகளும் பறவைகளும் இறைவனை துதிசெய்தது ஆதாரமாக அமைகிறது. ''நிச்சயமாக நாம் தாவூதிற்கு நம்மிடமிருந்து அருளை வழங்கினோம். மலைகளே பறவைகளே! அவருடன் சேர்ந்து துதிசெய்யுங்கள். மேலும் நாம் அவருக்கு இரும்பை எளிதாக்கிக் கொடுத்தோம்''. (ஸபஃ : 10). இஸ்லாம் அதிகமான இடங்களில் இப்பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள படைப்பினங்கள் யாவும் அகிலத்தின் இரட்சகனை துதிசெய்து மகிமைப்படுத்துகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. அல்லாஹ் கூறுகிறான் : تقدم

"(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது". (ஆல இம்ரான் : 96). تقدم கஃபா என்பது சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாயிலின் மத்தியில் அமைந்துள்ள பெட்டி வடிவிலான ஒரு சதுர கட்டிடமாகும். அதற்கு கதவு உண்டு, ஆனால் யன்னல்கள் இல்லை. அதன் உள்ளே ஒன்றும் இல்லை. மேலும் அது யாருடைய கல்லறையும் அல்ல. மாறாக, அது ஒரு தொழுகை அறை. கஃபாவிற்குள் தொழும் ஒரு முஸ்லீம் எந்தத் திசையிலும் தொழலாம். வரலாறு முழுவதும் கஃபா பலமுறை புனரமைக்கப் பட்டுள்ளது. நபி இப்ராஹீம் (ஆபிரகாம்) தனது மகன் இஸ்மாஈலுடன் சேர்ந்து அதன் அடித்தளத்தை முதலில் அமைத்தார். கஃபாவின் மூலையில், ஆதம் நபியின் காலத்திலிருந்தே இருந்ததாகக் கருதப்படும் கருப்புக் கல் உள்ளது. இருப்பினும், இது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது உள்ளார்ந்த சக்தி வாய்ந்த கல் அல்ல. மாறாக, அது முஸ்லிம்களுக்கான அடையாளமாக விளங்குகிறது.

பூமியின் கோளவடிவத் தன்மையானது, தொடராக இரவு பகல் மாறி மாறி வருவதை குறிக்கறது. மேலும் முஸ்லிம்கள் கஃபாவைச் சுற்றி தவாப் செய்வதன் மூலம் ஒன்றிணைந்திருப்பதும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைகளில் மக்கா திசை நோக்கித் தொழுவதும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அகிலங்களின் இரட்சகனை மகிமைப்படுத்தி துதிப்பதில் எப்போதும் தொடர்பில் இருப்பதை பிரதிபலிக்கிறது. இதனை படைப்பாளனான அல்லாஹ் தனது நபி ஆபிரகாமுக்கு- இப்ராஹிமுக்கு- கஃபாவின் அஸ்திவாரங்களை உயர்த்தி அதனைத் தவாப் செய்யுமாறு கட்டளையிட்டான். அதே போன்று கஃபாவானது தொழுகையின் திசையாக இருக்க வேண்டும் என எமக்குக் கட்டளையிட்டுள்ளான்.

தொழுகையின் திசை அல்-அக்ஸா பள்ளிவாயிலிருந்து மக்காவில் உள்ள புனித ஹரம் பள்ளிக்கு மாற்றப்பட்டது ஏன்?

கஃபா ஆலயம் தொடர்பான குறிப்புகள் வரலாறு முழுதும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அரேபிய தீபகற்பத்திற்கு அப்பால் தொலைத்தூரத்திலிருந்து இதனை தரிசிப்பதற்காக மக்கள் வருடம் தோரும் வருகை தந்திருந்தனர். அத்துடன் முழு அரேபியத் தீபகற்பத்தில் உள்ளோரும் இதனைப் புனிதப்படுத்துகின்றனர். கஃபா குறித்து பழைய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது: 'பாக்கா பள்ளத்தாக்கைக் கடந்து, அவர்கள் அதை நீரூற்றுகளின் இடமாக மாற்றுகிறார்கள்'. (பழைய ஏற்பாடு, சங்கீதம் 84).

அரேபியர்கள் இஸ்லாம் வர முன் கஃபாவை மிகவும் மதித்து புனிதப்படுத்துவோராக இருந்தனர். ஆரம்பத்தில், முஹம்மது நபி தூதுவராக அனுப்பப்பட்டவேளை, அல்லாஹ் ஜெரூசலத்தில் உள்ள பைத்துல் மக்திஸை நபியவர்களின் கிப்லாவாக ஆக்கினான். முஹம்மது நபியைப் பின்பற்றுவோரில் அவர்களை எதிர்போரிலிருந்து, அல்லாஹ்வுக்கு தூய்மையான முறையில் கட்டுப்படுவோரை வேறுபடுத்துவதற்கான சோதனையாக, புனித ஹரமை நோக்கி தொழும் திசையாக ஆக்கிக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். இதயங்களைத் தூய்மைப்படுத்துவதும், அல்லாஹ்வில் மாத்திரம் உள்ளத்தைப் பற்றுக்கொள்ளச் செய்வதுமே கிப்லாவை (தொழுகையின் திசையை) மாற்றியதன் பின்னணியில் உள்ள பிரதான நோக்கமாகும். நபியவர்கள் வழிகாட்டலை ஏற்று முஸ்லிம்கள் கட்டுப்பட்டனர். யூதர்களோ தங்களின் கொள்கைக்கு நியாயம் கற்பிக்க நபியவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுததை சார்பாக கொண்டனர். تقدم

கிப்லாவின் மற்றமானது, அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கைகளை இஸ்ரவேலர்கள் மீறியதன் காரணமாக, மதத்தலைமையானது இஸ்ரவேலர்களிடமிருந்து அகற்றப்பட்டடு அரேபியர்களுக்கு மாறுவதற்கான அறிகுறியாகவும் திருப்புமுனையாகவும் காணப்பட்டது.