Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இஸ்லாத்தின் அடிப்படைகள் (இஸ்லாத்தின் பிரதான கடமைகள்) :

நபி முஹம்மத் கொண்டு வந்த இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் யாவை?

படைப்பாளன் ஒருவன் என்றும் அவனை மாத்திரமே வணங்கி வழிப்படுவது என்றும், முஹம்மத் அவனின் அடியாரும் தூதருமாவார் என ஒப்புக்கொண்டு சான்று பகர்வதாகும்.

தொழுகையின் மூலம் அகிலங்களின் இரட்சகனானுடன் தொடர்பில் எப்போதும் இருத்தல்.

நோன்பு நோற்பதன் மூலம் ஒருவரின் விருப்பத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் வலுப்படுத்துவதும், மற்றவர்களுடன் இரக்கம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை விருத்திசெய்து கொள்வதுமாகும்.

ஸகாத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு தனது சேமிப்புச்செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சாதாரண விகிதத்தை செலவு செய்வதாகும். ஸகாத் என்பது ஒரு வணக்கமாகும். அது கஞ்சத்தனம், உலோபித்தனம் ஆகிய குணங்களை களைந்து ஈதல் மற்றும் கொடை கொடுத்தல் போன்ற உயரிய பண்புகள் குடிகொள்ள வகைசெய்கிறது.

மக்காவிற்கு ஹஜ் யாத்திரை செல்வதன் மூலம் அனைத்து இறைவிசுவாசிகளும் ஒரே உணர்வுடன் ஒரே வகையான கிரியைகளை நிறைவேற்றுவதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் முழுமையாக இறைவழிபாட்டில் திலைத்திருப்பதாகும். இந்தக் கடமையானது வித்தியாசமான மனித உறவுகள், கலாச்சாரங்கள், மொழிகள், தராதரங்கள் மற்றும் நிறங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் படைப்பாளனான அல்லாஹவின் பால் முன்னோக்கிச் செல்வதில் அனைவரும் சமம் எனும் ஒற்றுமையின் குறியீட்டைப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது.

ஒரு முஸ்லிம் ஏன் தொழவேண்டும்?

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக தொழுகையை ஆக்கி, தொழுமாறு கட்டளையிட்ட தனது இரட்சகனுக்கு கடடுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் தொழுகையை நிறைவேற்றுகிறான்.

ஒரு முஸ்லிம் தினமும் காலை ஐந்து மணிக்கு தொழுகைக்கு எழுவார். முஸ்லிமல்லாத அவரின் நண்பர்கள் அதே நேரத்தில் காலை உடற்பயிற்சிக்கு எழுவார்கள். முஸ்லிமின் தொழுகையானது உடல் மற்றும் ஆன்மீகரீதியான ஊட்டமாக அமையும், அதே நேரத்தில் அவர்களின் உடற்பயிற்சி உடலுக்கான ஊட்டமாக மாத்திரமே அமையும். ஒரு முஸ்லிம் இறைவனிடம் தனது தேவைகளை கேட்கும் பிரார்த்தனையை விட்டும் தொழுகை வித்தியாசமானது. இப்பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் எப்போதும் மேற்கொள்ளலாம். இதற்கு ருகூஊ ஸுஸுத் போன்றவைகள் தேவையில்லை.

ஆன்மாவை பட்டினியில் வதைத்து நம் உடம்பை கட்டாக வைத்துக் கொள்வதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதன் விளைவுதான் உலகில் மிகவும் வசதி படைத்தவர்களின் எண்ணற்ற தற்கொலைகள் நிகழ்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.!

வழிபாடுகள் மூளையில் உள்ள உணர்வு மையத்தில் உள்ள உணர்வை ரத்து செய்ய வழிவகுக்கும். இது சுய உணர்வு மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது. எனவே இதனால் ஒரு நபர் தன்னை ஒரு உயர்நிலை அடைந்ததை உணருவார். ஆகவே இது ஒரு வகை உணர்வாகும். இதனை அனுபவித்தவர் தவிர வேறு யாருக்கும் புரிந்து கொள்ள முடியாது.

வழிபாடுகள் மூளையில் உணர்வு மையங்களை இயக்குகின்றன. எனவே இதன்மூலம் கோட்பாட்டுரீதியான தகவல்களாகவும் சடங்குகளாகவும் இருந்த நம்பிக்கை அகநிலை உணர்ச்சி அனுபவங்களாக மாற்றம் பெருகின்றன. தந்தை தன் மகன் பயணத்திலிருந்து வீட்டிற்கு திரும்பியதும், அவனை வார்த்தை மூலம் வரவேற்பதால் மாத்திரம் திருப்தியடைவாரா? இல்லை மாறாக அவனை கட்டியணைத்து முத்தமிடும் வரையில் அவரின் மனம் திருப்தியடையாது என்பதே உண்மையாகும். நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் உணர்வு பூர்வமாக பிரதிபலிப்பதில் மனதுக்கு உள்ளார்ந்த விருப்பம் உண்டு. இந்த விருப்பத்தைத் பூர்த்தி செய்யவே வணக்க வழிபாடுகள் வந்துள்ளன. ஆகவே தொழுகை நோன்பு போன்ற கடமைகளில் கட்டுப்படுதலும் கீழ்ப்படிதலும் அடங்கியுள்ளன.

டாக்டர் ஆண்ட்ரூ நியூபெர்க் (அமெரிக்காவின் பென்ஸிலோனியா பல்கழகத்தின் ஆன்மீக ஆய்வுகளுக்கான மைய்யத்தின் இயக்குனர்) கூறுகிறார்: 'உடல்,மனம் மற்றும் உளவியல் ரீதியாக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், அமைதி மற்றும் ஆன்மிக உயர்வை அடைவதிலும் (இபாதத்) வணக்கவழிபாடுகள் பெரும் பங்கு வகிக்கிறன, படைப்பாளனிடம் திரும்புவது அதிக அமைதி மற்றும் மேன்மைக்கு வழிவகுக்கிறது'. அமெரிக்காவின் பென்ஸிலோனியா பல்கழகத்தின் ஆன்மீக ஆய்வுகளுக்கான நிலையத்தின் இயக்குனர்