Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

படைப்பாளனின் பண்புகள் எவை? ஏன் அவனுக்கு 'அல்லாஹ்' என்ற பெயர் வழங்கப்படுகிறது?

மத்திய கிழக்கில் வாழும் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் யாவரும் அல்லாஹ் என்ற வார்த்தையை கடவுளுக்குப் பயண்படுத்துகின்றனர். இது 'உண்மையான ஏக இறைவனைக் குறிக்கிறது. அல்லாஹ்வே மூஸா மற்றும் ஈஸாவின் (அவர்கள் இருவருக்கும் சாந்தி உண்டாவதாக) கடவுளாவான். அல்லாஹ் தனது திருமறை அல் குர்ஆனில் 'அல்லாஹ்' என்ற பெயராலும் மற்றும் வேறு (அழகிய) பெயர்கள் பண்புகளாலும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளான். பைபிளின் பழைய ஏற்பாட்டில் பழைய பிரதியில் 89 தடவைகள் அல்லாஹ் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் பண்புகளுள் படைப்பாளன் ' அல் காலிக்' என்பதும் ஒன்றாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

"அந்த அல்லாஹ்தான் படைப்பவன். (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்; (அவனே) படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே (அனைவரையும்) மிகைத்தவன்; மிக ஞானமுடையவன்". (ஹஷ்ர் : 24). (அல் ஹஷ்ர் : 24)

அவனே இப்பிரபஞ்சத்தின் ஆதியும் அந்தமுமாவான். அதாவது அவனுக்கு முன் எதுவும் இருக்கவில்லை, அவனுக்குப் பின் எதுவும் கிடையாது. இது குறித்து அல்லாஹ் தனது வேதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறான். "அவனே முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனுமாவான். அவன் யாவற்றையும் நன்கறிந்தவனுமாவான்." (அல் ஹதீத் : 3). تقدم

அவன் திட்டமிட்டு நிர்வகிப்பவனாவான் : "வானத்திலிருந்து பூமிவரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான்". (ஸூறதுஸ் ஸஜ்தா : 5). تقدم

அவன் யாவற்றையும் அறிந்தவனும் பேராற்றலுடையவுமாவான் "அவன் நன்கறிந்தவனும் பேராற்றலுமுடையவனாக இருக்கிறான்". (பாதிர் : 44). تقدم

அவன் தனது எந்த படைப்பின் தோற்றத்திலும் பிரதிபலிக்கமாட்டான் "அவனைப்போல் எதுவும் கிடையாது அவன் யாவற்றையும் செவியேற்பவன் பார்ப்பவன்". (ஷூரா : 11). تقدم

அவனுக்கு எந்தப்பங்காளனும் கிடையாது. அதே போல் அவனுக்கு எந்தப்பிள்ளையும் கிடையாது "(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக எதுவுமில்லை". (இஃலாஸ் : 1- 4) تقدم

அவன் ஞானமிக்கவனாவான் "அல்லாஹ் யாவற்றiயும் அறிந்தவனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கிறான்". (நிஸா : 111). تقدم

அவன் நீதியாளனவான் "உமது இரட்சகன் எவருக்கும் அநியாயம் இழைக்கமாட்டான்". (கஹ்ப் : 49). تقدم

படைப்பாளனைப் படைத்தவன் யார்?

இக்கேள்வியானது "படைப்பாளன் படைப்பினங்களுக்கு ஒப்பானவன்" என்ற தவறான கருதுகோளின் -யூகத்தின்- விளைவாக எழுந்ந கேள்வியாகும். இக்கருதுகோளானது பகுத்தறிவு ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் நிராகரிக்கப்பட்டதாகும். அதனை பின்வருமாறு தெளிவுபடுத்திட முடியும்.

ஒரு மனிதனிடம் சிவப்பு நிறத்தின் மனம் என்ன என ஒரு எளிய வினாவை தொடுத்தால் அவனால் பதிலளிக்க முடியுமா? நிச்சயமாக, இந்த கேள்விக்கு எந்த பதிலும் இல்லை, ஏனென்றால் சிவப்பு நிறமானது நுகரப்படும் வாசனை பொருட்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படவில்லை.

உதாரணத்திற்கு தொலைக்காட்சி அல்லது குளிர்சாதனப் பெட்டி போன்றபொருளைத் தயாரிக்கும் நிறுவனம், குறித்த சாதனத்தைப் பயன்படுத்தும் முறையை விளக்கிட அறிவுறுத்தல்கள், ஒழுங்குகள் வரையரையரைகள் அடங்கிய ஒரு கையேட்டை அத்துடன் இணைக்கிறது. உற்பத்தி செய்யும் குறித்த நிறுவனம் இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டிருக்காத நிலையில், வேண்டப்பட்ட விதத்தில் சாதனத்தில் இருந்து பயனடைய விரும்பும் நுகர்வோர் இந்த அறிவுருத்தல்களை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் இல்லாவிட்டால் குறித்த சாதனத்திலிருந்து பயனை அடையமுடியாது என்பது தெளிவான விடயமாகும்.

மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து தெரிய வருவது ஒவ்வொரு காரணத்திற்கும் காரணகர்த்தா உள்ளார் என்பதாகும். ஆனால் கடவுளுக்கு கர்த்தா தேவையில்லை என்பதும் அவர் படைக்கப்படும் ஒரு பொருளுக்குள் உள்ளடக்கபடவும் மாட்டார் என்பதும் யதார்த்தமான விடயம் என்பது சாதாரணமாகவே புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா! ஆகவே கடவுளென்பவர்தான் எல்லாவற்றிற்கும் முதலாமவராகவும் அவரே அடிப்படை காரணகர்த்தாவாகவும் உள்ளார் என்பதும் புலனாகிறது. காரணக் கோட்பாடானது அல்லாஹ்வின் பிரபஞ்ச விதியாகும். என்றாலும் அல்லாஹ் நாடியதை செய்பவன் அவனுக்கே முழு வல்லமையும் பேராற்றலும் உண்டு.