Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இவ்வுலக வாழ்வின் இலக்கு :

உலக வாழ்வின் அடிப்படை இலக்கு யாது?

உண்மையில் உலக வாழ்வின் அடிப்படை இலக்கு தற்செயலாக உணர்வு பிரவாகிக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பது அல்ல. மாறாக அல்லாஹ்வை –கடவுளை- அறிந்து அவனுக்கு வழிப்படுவதன் ஊடாக அடைந்து கொள்ளும் ஆழமான அக நிம்மதியை எய்துகொள்வதாகும்.

இந்த இறை இலக்கை எய்து கொள்வதே –நித்திய சுகத்தையும் யதார்த்தமான நிரந்த மகிழ்ச்சியையும் அடைந்து கொள்ள காரணமாக அமையும். ஆக, இதுவே எங்களது அடிப்படை குறிக்கோளாக இருந்தால் இந்த இலக்கை அடைந்து கொள்வதில் ஏற்படும் எந்தக் கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள் இருப்பினும் அவற்றை எதிர்கொள்வது அற்பமாகிவிடும்.

வாழ்வில் எந்தத் துன்பத்தையோ கஷ்டத்தையோ எதிர்கொள்ளாத ஒரு மனிதனின் ஆடம்பரமான வாழ்வு குறித்து சிந்திப்போமானால் இவ்வாறான ஒரு மனிதன் தனது ஆடம்பர வாழ்வின் காரணமாக அல்லாஹ்வை மறந்து அவன் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்தவனாவான். இவ்வாறான ஒரு மனிதனை, கஷ்டம் மற்றும் துன்பம் நிறைந்த அனுபவங்கள் அல்லாஹ்வின்பால் இட்டுச்சென்று தனது வாழ்வின் இலக்கை உண்மையில் அடைந்து கொண்ட ஒரு மனிதனோடு ஒப்பிட்டுப்பாருங்கள். இருவரும் சமமாவார்களா? இஸ்லாமிய போதனைகளின் கண்ணோட்டத்தில் துன்பங்களை அனுபவித்து அல்லாஹ்வின் பால் சென்ற மனிதன், எவ்விதக் கஷ்டத்தையும் அனுபவிக்காது இவ்வுலகின் சுகபோகங்களில் திழைத்து, சுகபோகமான வாழ்வு அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்தி இருந்தவனை விட சிறந்தவனாவான்.

எல்லா மனிதர்களும் இவ்வுலக வாழ்வில் ஏதோ ஒரு இலக்கை அல்லது நோக்கத்தை அடைந்து கொள்ளவே பாடுபடுகின்றனர். அனேகமாக அவர்களின் இலக்கானது அவர்களிடம் காணப்படுகின்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும். நாம் மார்க்கத்தில் கண்டு அறிவியலில் காண முடியாமல் இருக்கின்ற ஒன்றுதான், மனிதன் எதற்காக முயற்சி செய்கிறான் என்பதற்கான காரணமாகும்.

மதமானது மனிதன் படைக்கப்பட்டு உயிர் வாழ்க்கை உருவாக்கப்பட்டதிற்கான காரணத்தை மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதே வேளை அறிவியல் என்பது ஒரு சாதனமே, அதனிடம் ஒரு மனிதனின் எண்ணம் மற்றும் நோக்கம் போன்றவற்றிற்கான எவ்வித விளக்கமும் கிடையாது.

மதத்தை ஆதரிப்பதற்கு அல்லது அதில் ஈடுபாடுகாட்டுவதில் மனிதர்கள் அதிகம் பயப்படுவதற்கான காரணம் வாழ்வின் சுகங்ககளை அனுபவிப்பதற்கு அது தடையாக அமைந்து விடும் என்பதினாலாகும். மதம் என்பது உண்மையில் மகிழ்ச்சியான விடயங்களிருந்து அவசியம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதும், அது அனுமதித்தவை தவிர அனைத்தும் தடைசெய்யயப்பட்டது என்பது மக்களிடம் பரவலாக காணப்படும் நம்பிக்கையாகும்.

இந்த தவறான நம்பிக்கையில் வீழ்ந்துள்ள அதிகமானோர் மதத்தைப் புறக்கணித்து விரண்டோடுகின்றனர். இப்பிழையான கருத்தியலை சரிபடுத்தவே இஸ்லாமிய மார்க்கம் வந்தது, அது அடிப்படையில் மனிதனுக்கு அனைத்தும் அனுமதிக்கப்பட்டதே என்றும் தடைசெய்யப்பட்டவைகளும் வரையறைகளுக்குட்பட்ட விடயங்களும் சில அம்சங்களே என்றும் இதில் எவரும் முரண்படுவதற்கில்லை என்பதாகவும் குறிப்பிட்டது.

ஆன்மா மற்றும் உடல் பிறர் உரிமைகள் ஆகியவற்றிற்கிடையில் சமநிலை பேணுமாறு தூண்டுவது போன்று சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து வாழுமாறும் தனிமனிதனுக்கு அழைப்பு விடுக்கிறது.

மதத்தை துறந்து வாழும் சமூகங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக தீய மற்றும் மோசமான மனித நடத்தையுடையோரை கையாழ்வது பற்றியதாகும். இவ்வாறான சமூகங்களில் நெறிதவறியோரை தடுக்க மிகக் கடுமையான தண்டனைகளை விதிப்பதை மட்டுமே உன்னால் காண முடியும்.

"உங்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதை சோதிக்கவே அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்".(அல்முல்க் :2). تقدم

உலக வாழ்வின் பெருமானம் என்ன?

பரீட்சையானது புதிய கல்வி வாழ்வை எதிர்கொள்வதற்காக, மாணவர்களின் தராதரத்தை மதிப்பிட்டு வேறுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். பரீட்சை குறுகியதாக இருந்தாலும், புது வாழ்வை எதிர் நோக்கியிருக்கும் மாணவரின் தலைவிதியை அது தீர்மானிக்கிறது. அதேபோன்று தான் மறுமை வாழ்வை முனனோக்கிச் செல்வோரின் தராதரத்தை வேறுபடுத்துவதற்காக இவ்வுலக வாழ்வு மனிதர்களுக்கான தேர்வாகவும் சோதனை களமாகவும் இருக்கிறது. உண்மையில் மனிதன் அவன் திரட்டிவைத்த பொருட்களுடன் இவ்வுலகைவிட்டு பிரிந்து செல்லாது தான் செய்த நல்வினைகளுடனும் செயற்பாடுகளுடனுமே பிரிந்து செல்கிறான். ஆகவே மறுமை வாழ்வையும், அங்கு கிடைக்கவிருக்கும் வெகுமதியையும் நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதை மனிதன் புரிந்துகொள்வது அவசியமாகும்.

மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்வு எவ்வாறு (கிடைக்கும்) சாத்தியமாகிறது?

அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, அவனுக்குக் கட்டுப்பட்டு, அவனின் விதியை ஏற்றுக்கொள்வதன் மூலமே மனிதனுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.

எல்லா விடயங்களும் அடிப்படையில் அர்த்தமற்றவை என்றும். அத்துடன் ஒரு நிறைவான வாழ்வை அடைந்து கொள்வதற்கு தமக்கென ஒரு கருத்தை சிருஷ்டித்துக்கொள்வதற்கான சுதந்திரம் இருப்பதாகவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வுலகில் எமது இருப்புக்கான நோக்கத்தை மறுப்பது உண்மையில் தன்னையே ஏமாற்றிக்கொள்வதற்கு நிகரான விடயமாகும். அதாவது இவ்வுலக வாழ்வில் எமக்கு ஒரு இலக்கு உண்டு என நாம் போலியாக எமக்குள்ளே கூறிக்கொள்வதை ஒத்ததாகும். எமது இந்நிலையானது குழந்தைகள் தங்களுக்கு மத்தியில் விளையாடும் போது வைத்தியர்கள், செவிலியர்கள், தாய் தந்தையர்கள் என நடிப்பதை போன்றதாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். வாழ்வில் எமது இலக்கை தெரிந்து கொள்ளாது விடின் மகிழ்ச்சியை ஒரு போதும் அடைந்து கொள்ளவே முடியாது என்பதே யதார்த்தமாகும்.

உதாரணத்திற்கு ஒரு மனிதன் தனது விருப்பத்திற்கு மாறாக மிகவும் ஒரு ஆடம்பரமான தொடரூந்தில் முதல் தர வகுப்பில் ஏற்றப்பட்டிருப்பதை காண்கிறார். இது ஒரு மிக உயர்ந்த அனுபவமாகவும் ஆடம்பரத்தின் உச்சமாகவும் அவரைப் பொருத்தவரை இருக்கலாம். என்றாலும் நான் எப்படி இந்த தொடரூந்தில் ஏறினேன்? இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன? இது எங்கு செல்கிறது? போன்ற அவரின் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடை காணாது அவரின் பயணம் மகிழ்ச்சியானதாக இருக்குமா? மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான எந்தப்பதிலும் கிடைக்கவில்லையாயின் அவரால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அவர் தனது வசம் உள்ள அனைத்து ஆடம்பரங்களையும் அனுபவிக்கத் தொடங்கினாலும், அவர் ஒருபோதும் உண்மையான, அர்த்தமுள்ள மகிழ்ச்சியை அடைய மாட்டார். இந்தக் கேள்விகளை அவர் மறக்கச் செய்ய இந்தப் பயணத்தின் சுவையான உணவு மாத்திரம் போதுமா? இந்த வகையான மகிழ்ச்சி தற்காலிகமானதும் போலியானதுமாகும். இந்த முக்கிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவதை வேண்டுமென்றே பொருட்படுத்தாது இருப்பதன் மூலம் மட்டுமே அதனை பெற்றுக்கொள்ள முடியும். இது குடிப்பழக்கத்தின் விளைவாக ஏற்படும் தற்காலிக போலி பரவச நிலையைப் ஒத்தது. அது குடிப்பழக்கத்திற்கு உட்பட்ட அந்நபரை அழிவுக்கே இட்டுச் செல்லும். அத்துடன் மனித இருப்பின் இன்றிமையா கேள்விகளான இவைகளுக்கு விடை காணாத வரையில் யதார்த்தமான உண்மையான மகிழ்ச்சி ஒரு மனிதனுக்கு கிடைக்கப் போவதில்லை என்பதே ஒரு பேருண்மையாகும்.