Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

அல்லாஹ் தனது அடியார்களை ஒரே நேரத்தில் எவ்வாறு விசாரிக்க முடியும்?

அடியார்களுக்கு ஒரே நேரத்தில் உணவளிப்பது போல் அவர்களை மறுமையில் ஒரே நேரத்தில் விசாரிப்பான்.

அல்லாஹ் கூறுகிறான் :

"மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு, உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்". (லுக்மான் : 28). تقدم

மறுபிறவி கோட்பாட்டில் ஒரு முஸ்லீம் நம்பிக்கை கொள்ளாதது ஏன்? குறிப்பு :(மறுபிறப்பு அல்லது மறு பிறவி என்பது உயிர் அல்லது ஆன்மா உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதனாகவோ, விலங்காகவோ அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் அடிப்படையாகும்).

இந்த பிரபஞ்சம் முழுதும் படைப்பாளனான அல்லாஹ்வின் ஆளுகையின் கீழ் உள்ளது. ஆகவே அவன் மாத்திரமே தனது விருப்பத்திற்கு அமைவாக அனைத்தையும் அடிபணியவைக்கக்க கூடிய முழுமையான அறிவையும், ஆற்றளையும், திறனையும் பெற்றுள்ளான். சூரியன், கோள்கள் மற்றும் (விண்மீன் திரள்கள்) பால்வெளிமண்டளங்கள் ஆகியவை படைப்பின் துவக்கம் முதல் மிகத்துல்லியத்துடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த நுணுக்கமும் திறனும் மனிதர்களின் உருவாக்கத்திற்குப் பொருந்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மனித உடல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பானது, மனித உடலிலிருந்து வெளியேறிய ஆன்மாக்களை –உயிர்களை- விலங்குகளின் உடலில் குடிகொள்ளச் செய்ய முடியாது என்பதையும், தாவரங்கள் மற்றும் பூச்சிகள் அல்லது மனிதர்களிடையே கூட ஊடாடல் செய்ய முடியாது என்பதையும் காட்டுகிறது. மேலும் அல்லாஹ் மனிதனை பகுத்தறிவு மற்றும் அறிவாற்றலால் தனித்துவப்படுத்தி, அவனை பூமியில் ஒரு கலீஃபாவாக -பிரதிநிதியாக- ஆக்கி ஏனைய பல உயிரனங்களை விட அவனை சிறப்பாக்கி கண்ணியப்படுத்தி அவனது அந்தஸ்தை உயர்த்தியுள்ளான். படைப்பாளனான அல்லாஹ் மரணத்தின் பின் மீண்டும் உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் மறுமை நாளை ஏற்படுத்தி உயிரினங்கள் அனைத்தையும் அவன் விசாரித்து தீர்ப்பளிப்பதும், அதன்படி அவர்களின் தலைவிதி சொர்க்கம் அல்லது நரகம் என்பதை தீர்மானிப்பதும், அனைத்து நல்ல மற்றும் கெட்ட செயல்களும் அந்நாளில் மதிப்பிடப்படுவதும் படைப்பாளனான அல்லாஹ்வின் ஞானத்திற்கும் அவனின் நீதிக்குமான சான்றாக அமைந்துள்ளது.

அல்லாஹ் கூறுகிறான் :

''ஆகவே எவர் ஒரு அணுவளவேனும் நன்மை செய்தாலும் அவர் அதனைக் கண்டு கொள்வார். எவர் ஒரு அணுவளவேனும் தீமை செய்தாலும் அவர் அதனைக் கண்டு கொள்வார்''. (அல்ஸல்ஸலா :7-8). تقدم

கழாகத் கத்ர் -இறைவிதியாகிய அல்லாஹ்வின் நித்திய அறிவில் எழுதப்பட்ட செயல்களுக்கு (கடவுள்) அல்லாஹ் மனிதர்களை விசாரிப்பது ஏன்?

உதாரணமாக, ஒரு நபர் கடையில் ஏதாவது வாங்க விரும்பினால், அந்தப் பொருளை வாங்குவதற்கு தனது மூத்த மகனை அனுப்ப முடிவு செய்வார், காரணம் அவரின் அந்த மகன் புத்திசாலி என்றும் அவர் உடனே சென்று தந்தை விரும்புவதை வாங்குவார் என்றும் அவருக்கு முன்பே தெரியும். ஆனால்அவரின் அடுத்த மகனைப் பொருத்தவரை தனது நண்பர்களுடன் விளையாடுவதில் ஈடுபட்டு பணத்தை தொலைத்து விடுவார் என்பதனால் அவரிடம் இப்பொறுப்தை ஒப்படைக்க விரும்பமாட்டார். இது உண்மையில் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தந்தை தனது தீர்ப்பை கட்டமைத்துள்ளார் என்பது புரிகிறது.

ஆகவே விதிகள் பற்றிய பூரணமாக அறிந்திருப்பது ஒரு போதும் எமது தெரிவிற்கு முரணாக அமைவதில்லை. காரணம் எமது தெரிவுகள் மற்றும் விருப்புகள் பற்றிய அவனின் முழுமையான அறிவிற்கேட்ப எமது செயல்களை அல்லாஹ் அறிந்துள்ளான் என்பதே இதன் கருத்தாகும். அத்துடன் மனித இயல்பை அறிவதில் அவனை விஞ்சிட யாரும் கிடையாது. அவனே எம்மைப் படைத்தவன், எம் இதயத்தில் நாம் விரும்பும் நன்மையான மற்றும் தீமையான விடயங்களை அவன் அறிந்திருப்பதோடு, நம் செயல்களையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றான். இவ்வாவறு அவன் நம்மைப் பற்றி அறிந்தவற்றை அவனிடம் பதிவு செய்து வைத்திருப்பது நம் விருப்பத்திற்கு முரணாக மாற மாட்டாது. காரணம் அல்லாஹ்வுக்கே –கடவுளுக்கே- முழுமையான அறிவு இருக்கிறது என்பதையும், மனித அறிவு குறை நிறைந்தவை அவனின் எதிர்பார்ப்புகள் சரியானதாகவோ அல்லது தவறனதாகவோ அமைய முடியும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் .

ஒரு மனிதன் அல்லாஹ் விரும்பாத வகையில் செயற்படுவது சாத்தியமான விடயம். ஆனால் அவனின் செயற்பாடானது ஒரு போதும் இறை நாட்டத்திற்கு எதிரானதாக அமையாது. ஏனெனில் அல்லாஹ் அவனுக்கு தெரிவு செய்வதற்கான விருப்பத்தை வழங்கியுள்ளான். அவனின் அந்தச் செயற்பாடானது அவனுக்கு பாவமானதாக இருந்தாலும் அவன் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு உட்பட்டவனாகவே உள்ளான். இதற்கு முரணாக அவனால் இருக்க முடியாது ஏனெனின் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறிச் செல்லும் அதிகாரத்தை அவனுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

நாம் விரும்பாத ஒன்றை எமது உள்ளம் ஏற்றுக்கொள்ளவென அதனை நிர்ப்பந்திக்கவோ அதனை திணித்திடவோ எம்மால் முடியாது. ஒரு மனிதனை பயமுறுத்தி அச்சுறுத்துவதன் மூலம் நம்முடன் இருக்க கட்டாயப்படுத்துவது சாத்தியமான விடயம். ஆனால் அந்த மனிதனை எம்மை விரும்ப வேண்டும் என கட்டாயப்படுத்திட முடியாது. ஆகவே எமது உள்ளத்தை எந்த வகையிலும் நிர்பந்தித்தித்து கட்டாயப்படுத்திட முடியாதவாறு அல்லாஹ் பாதுகாத்துள்ளான். இதன் காரணமாவே எமது உள்ளங்களின் விருப்பங்கள் மற்றும் அதன் தூண்டல்களுக்கு ஏற்ப எம்மை விசாரித்து எமக்கான வெகுமதிகளை வழங்குகிறான்.