Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இஸ்லாம் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கான சமத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளதா?

முஸ்லிம் பெண், சமத்துவத்தை அல்லாது, நீதியையே தேடுகின்றாள்- ஏனெனில் ஆணுடான சமத்துவம் பெரும்பாலும் அவளின் உரிமைகளையும் தனித்துவத்தையும் இழக்கச் செய்து விடுகிறது. ஒருவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவருக்கு ஐந்து வயது, மற்றவருக்கு பதினெட்டு வயது. அந்த நபர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டை வாங்க விரும்புகிறார். இந்த விடயத்தில் சமத்துவம் என்பது இருவருக்கும் ஒரே அளவிலான சட்டையை வாங்குவதைக் குறிக்கும். அவ்வாறு அவர் சமத்துவமாக நடந்து கொள்ள வெண்டும் என்பதற்கு ஒரே அளவிளான சட்டையை வாங்கினால் அவர்களுககு சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இங்கே ஒவ்வொருவருக்கும் தகுந்த அளவு சட்டை வாங்கிக் கொடுப்பதே நீதியாகவும் அனைவரினதும் மகிழ்ச்சியை உறுதி செய்வதாகவும் அமையும்.!.

இன்றைய காலக்கட்டத்தில், ஆணால் செய்யக்கூடிய அனைத்தையும் பெண் தன்னால் செய்ய முடியும் என்று நிரூபிக்க முயற்சிக்கின்றாள். இருப்பினும், உண்மையில், இந்த விஷயத்தில் பெண் தனது தனித்துவத்தையும், வேறுபாட்டையும் இழந்து நிற்கினறாள். ஒரு ஆணிணால் செய்ய முடியாத பணிகளை நிறைவேற்றுவதற்காகவே அல்லாஹ் அவளைப் படைத்துள்ளான். பிரசவ வலி மிகவும் கடுமையான வலிகளில் ஒன்றாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு ஈடாக பெண்களை கௌரவப்படுத்தவே மார்க்கம் வந்துள்ளது. இந்த உரிமையை அவள் தொழில் செய்யாது, செலவுகளைப் பொறுப்பேற்காது தனது கணவனிடமிருந்து பெற்றுக் கொள்வாள். மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போல் மனைவியின் செல்வத்தை அவளின் விருப்பத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளவும் கணவனுக்கு உரிமை அளிக்கிறது. பிரசவ வலிகளைத் தாங்கும் சக்தியை அல்லாஹ் ஆண்களுக்குக் கொடுக்காத அதே வேளை மலைகளில் ஏறும் ஆற்றலை கொடுத்துள்ளான்.

ஒரு பெண் மலையேற ஆசைப்பட்டால், கடினமாக உழைத்து, ஆணைப் போலவே தன்னால் அதைச் செய்ய முடியும் என்று கூறினால், அவளால் அதைச் செய்ய முடியும். இருப்பினும், கடைசியில், குழந்தைகளைத் பெற்றெடுத்து பராமரிப்பதும், தாய்ப்பால் கொடுப்பதும் அவளே. எந்த சூழ்நிலையிலும் எந்த ஆணாலும் இதை செய்ய முடியாது. இவ்வாறான கடினமான செயற்பாடுகளில் ஒரு பெண் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதானது அவளின் கூடுதல் முயற்சியே. இதனை அவளால் தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஒரு முஸ்லிம் பெண் அவளுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் உரிமைகளை புறந்தள்ளிவிட்டு, தனது உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பெற விரும்பினால் அது பேரிழப்பாகும். ஏனென்றால் அவள் உண்மையில் இஸ்லாத்தில்தான் அதிக உரிமைகளை அனுபவிக்கிறாள் என்பது பலருக்குத் தெரியாது. இஸ்லாம் ஆண்களும் பெண்களும் எதற்காக படைக்கப்படட்டார்களோ அதற்கான முழுமையான ஒருங்கிணைப்பை உத்தாரவாதப்படுத்துவதோடு, இதன் மூலம் அனைவருக்குமான மகிழ்ச்சியையும் உறுதி செய்கிறது.

பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்?

சர்வதேச புள்ளிவிவரங்களின்படி, ஆண்களும் பெண்களும் சுமாராக சமமான விகிதத்தில் பிறக்கிறார்கள். பெண் குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் ஆண்களை விட வாய்ப்புகள் அதிகம் என்பது அறிவியல் பூர்வமாக யாவரும் அறிந்த விடயமாகும். போர்க் காலங்களில் ஆண் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக இருக்கும். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாக உள்ளது என்பதும் அறிவியல் ரீதியாக அறியப்பட்ட ஒரு விடயமாகும். இதன் விளைவாக மனைவியை இழந்த விதவை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே விதவைகளின் சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, உலக மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்ற முடிவுக்கு வருவோம். எனவே, ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு மனைவி என்று வரையறுப்பது நடைமுறையில் பொருத்தமான விடயமல்ல.!

பலதாரமணம் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்ட சமூகங்களில், ஆண்களுக்கு கள்ளக்காதலிகள் மற்றும் திருமணத்திற்கு வெளியே பல உறவுகள் இருப்பது பொதுவான பரவலாக அறிய முடிகின்ற விடயமாகும். இந்நடைமுறையானது பலதார மணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காது, மறைமுகமாக அங்கீகரிப்பதற்கான குறியீடாக காணப்படுகிறது! இஸ்லாத்திற்கு முன் இதுவே பரவலாக காணப்பட்ட நடைமுறையாகும், இதைச் சரிசெய்து பெண்களின் உரிமைகள், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்து, அவர்களின் காதலியை சட்டபூர்வ மனைவியாக மாற்றி, அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கண்ணியம் மற்றும் உரிமைகளையும் பெற்றுத்தரவே இஸ்லாம் வந்தது.

இந்த சமூகங்களைப் பொறுத்தவரை திருமணமின்றியே உறவுகளை ஏற்றுக்கொள்வது, மற்றும் ஒரே பாலின திருமணங்கக்ளைக்கூட ஏற்றுக்கொள்வதில் எவ்விதப்பிரச்சினையும் இல்லை. அதே போன்று தெளிவான பொறுப்புப்புணர்ச்சி (கடமையுணர்வு) இல்லாமல் உறவுகளை ஏற்றுக்கொள்வது அல்லது தந்தை இல்லாத குழந்தைகளை ஏற்றுக்கொள்வது போன்றவற்றில் இந்த சமூகங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு ஆணுக்கும் பல பெண்களுக்கும் இடையிலான சட்டப்பூர்வ திருமணபந்தத்தை இவர்கள் ஏன் பொறுத்துக்கொள்வதில்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியமானவிடயமாகும்! அதே வேளை, இஸ்லாம் இந்த விடயத்தில் தீர்க்கமானதும் அறிவுபூர்வமானதுமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்களுக்கு பல மனைவிகளை வைத்திருக்க வெளிப்படையாக அனுமதிவழங்குகிறது. ஆனால் குறித்த ஆணுக்கு நான்கு மனைவிகளுக்கு குறைவாக இருந்து நீதியாக நடத்தல் மற்றும் பராமரிப்பதற்கான சக்தி பெற்றிருத்தல் போன்ற நிபந்தனைகளைப் பெற்றிருந்தாலே இந்த அனுமதி குறித்த ஆணுக்கு உண்டு. திருமணமாகாத ஆணை துணையாக பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பெண்ணின் பிரச்சனையை தீர்ப்பதற்கு, ஒன்று அவள் திருமணமான ஒரு நபரை திருமணம் முடித்தல்; அல்லது இன்னொருவருக்கு கள்ளக்காதலியாக இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுதல் எனும் இரண்டு வழிமுறைகளே காணப்படுகிறன.

இஸ்லாம் பல திருமணங்களை அனுமதித்திருந்தாலும், சிலர் புரிந்துகொண்டிருப்பது போல் முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும் என்பது கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான் :

"அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாகவே நடந்துகொள்ள வேண்டும்.) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்". (அந்நிஸா : 3). تقدم

மனைவியர் இடத்தில் நீதியாக நடத்தல் என்ற நிபந்தனையை நிறைவேற்ற முடியாதபோது ஒரு மனைவியை மாத்திரமே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறும் உலகின் ஒரே மத நூல் அல்குர்ஆன் மட்டுமே!

அல்லாஹ் கூறுகிறான் :

"(நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் அன்புகாட்டுவதில் நீதமாக நடக்க வேண்டுமென்று விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கியவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கருணை புரிபவனாக இருக்கிறான்". (நிஸா : 129). تقدم

எல்லா சந்தர்ப்பங்களிலும், திருமண ஒப்பந்தத்தில் இந்த நிபந்தனையை குறிப்பிடுவதன் மூலம் ஒரு பெண் தன் கணவனுக்கு ஒரே மனைவியாக இருக்க உரிமை உண்டு. இது ஒரு அடிப்படை நிபந்தனையாகும், இதனை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். இதனை மீறுவது கூடாது.

ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகளை திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது போல் ஒரு பெண் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை திருமணம் செய்து கொள்வது ஏன் அனுமதிக்கப்படவில்லை?

நவீன சமுதாயத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு மிக முக்கியமான விடயங்களில் ஒன்று ஆண்களுக்கு வழங்கப்படாத, பெண்களுக்கு மாத்திரம் இஸ்லாம் வழங்கிய உரிமை பற்றியதாகும். ஒரு ஆண் தனது திருமணத்தை திருமணமாகாத பெண்களுடன் மாத்திரம் வரையறுத்துக்கொள்வான். மறுபுறம், ஒரு பெண், திருமணமாகாத ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம், அல்லது அவர் ஏலவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம். அதாவது குழந்தைகளின் பரம்பரையை அவர்களின் உண்மையான தந்தைக்கு உறுதிப்படுத்தவும், மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் பெற்றோரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனந்தரச் சொத்துக்களை பாதுகாக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது. இருப்பினும், இஸ்லாம் ஒரு பெண் திருமணமான ஆணை அவனுக்கு நான்கு மனைவிகளுக்குக் குறைவாக இருக்கும் நிலையில் திருமணம் முடிக்க அனுமதி வழங்கியுள்ளது, ஆனால் அந்த ஆண் மனைவியரிடத்தில் நீதம் பேணல் மற்றும் அதற்கான இயலுமை (சக்தி) போன்ற நிபந்தனைகள பெற்றிருக்க வேண்டும். எனவே, ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு பரந்த அளவிலான தேர்வுகள் உள்ளன. மற்ற மனைவி எப்படி நடத்தப்படுகிறாள் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவும், இந்தக் கணவனின் நெறிமுறைகளைப் பற்றிய அறிவுடன் திருமண பந்தத்தில் இணைவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

அறிவியல் வளர்ச்சியுடன் டிஎன்ஏ பரிசோதனை மூலம் குழந்தைகளின் உரிமைகளை காக்க முடியும் என்று கருதினாலும், தந்தையை இந்த சோதனை மூலம்தான் தாய் தனது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிலை என்ன? அவர்களின் உளவியல் நிலை எப்படி இருக்கும்? மேலும், இவ்வாறான தடுமாற்றமான மனோ நிலையைக் கொண்ட ஒரு பெண்ணால் நான்கு ஆண்களுக்கு மனைவியாக இருக்கும் பாத்திரத்தை எப்படி வகிக்க முடியும்? அது மாத்திரமா, ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் அவள் உறவு கொள்வதால் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.