Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

நபி முஹம்மத் அவர்கள் பைதுல் மக்திஸுக்கு சென்று, அங்கிருந்து விண்ணுலகம் சென்று அதே இரவில் எவ்வாறு திரும்பிவந்தார்கள்?

நவீன தொழில்நுட்பமானது மனித குரல்களையும், படங்களையும் ஒரு நொடியில் கடத்தி இன்னொருவருக்கு சென்றடையச் செய்கிறது.1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தை உருவாக்கிய இறைவன் தனது நபியை, உடல் மற்றும் ஆன்மாவுடன் வானத்திற்கு உயர்த்தியிருக்க முடியாதா? புராக் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வாகனத்தின் மீது ஏறிச்சென்றார்கள். புராக் என்பது ஒரு வெள்ளை நிறமான பிராணி கழுதையை விட சற்று உயரமான கோவேரிக் கழுதையை விட உயரம் குறைந்த ஒரு வாகனமாகும்.(பிராணியாகும்;) அந்தப் பிராணி தன் பார்வை எட்டிய தூரம் வரை தனது கால்களை எடுத்து வைக்கும் அந்த அளவுக்கு வேகமாக பிரயாணம் செய்யும்! அதற்கு கடிவாளமும் விளக்கும் உண்டு அதில் நபிமார்கள் பிரயாணம் செய்துள்ளனர்.

இஸ்ரா மிஃராஜ் விண்ணுலகப்பயணமானது முழுமையாக இறைவல்லமை மற்றும் இறைநாட்டத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அதிசய நிகழ்வாகும். அது எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு என்பதுடன் நாம் அறிந்து வைத்துள்ள அனைத்து பிரபஞ்ச விதிகளிலிருந்து வித்தியாசப்படும் ஒரு நிகழ்வு. இப்பிரபஞ்ச விதிகளை இயற்றியவன் இறைவன் என்றவகையில் அகிலங்களின் இரட்சகனின் அத்தாட்சிகளில் ஒன்றாகவும் சான்றாதாரமாகவும் இது காணப்படுகிறது.

நபி முஹம்மத் அவர்கள் ஆயிஷாவை (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை சிறுவயதில் திருமணம் செய்தது ஏன்?

ஆயிஷா அம்மையார் நபியவர்களை மிகவும் விரும்பினார்கள் என்றும் அவர்கள் இந்த திருமணத்தினால் எந்தப் பிரச்சினையும் கொள்ளவில்லை என்பது குறித்து பேசும் ஹதீஸ்களை ஹதீஸ் கிரந்தங்களில் மிகவும் தரம் வாய்ந்த ஹதீஸ்களை கொண்ட ஸஹீஹ் அல் புஹாரி கிரந்தத்தில் எம்மால் கண்டு கொள்ள முடிகிறது.

இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், நபியவர்களின் காலத்தில் இருந்த எதிரிகள் முஹம்மது நபியை மிக அசிங்கமான முறையில் அவர் ஒரு கவிஞர் மற்றும் பைத்தியக்காரர் என்றெல்லாம் அவரை விமர்சித்தனர். ஆனால் ஒரு போதும் இந்த திருமண நிகழ்வு குறித்து அவரை யாரும் குறை கூறவில்லை, எவரும் இது குறித்து பேசவுமில்லை. ஆனால் தற்காலத்தில் இருக்கும் சில உள்நோக்கம் கொண்ட சில அற்பர்கள்தான் இஸ்லாத்தை விமர்சிப்பதற்காக இதனைக் குறித்துப் பேசுகிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளை மக்கள் அக்கால வழமை சார்ந்த பொதுவான நிகழ்வாகவே கருதினர். பல அரசர்கள் மிகச்சிறிய வயதினரை திருமணம் செய்துள்ளனர் என்ற விவரங்கள் வரலாற்றில் காணப்படுகிறது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பெற்றெடுக்க முன் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களை ஒரு தொன்னூறு வயது நிரம்பிய மனிதருக்கு திருமணம் பேசியதான தகவல் கிறிஸ்துவ நம்பிக்கையில் காணப்படுகிறது. இதனடிப்படையில் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வயது நபியவர்களை திருமணம் முடிக்கையில் மேற்குறித்த வயதிற்கு நெருக்கமாக இருந்ததை அவதானிக்க முடிகிறது. அல்லது பதினோராம் நூற்றாண்டில் இங்கிலாந்து மகாராணியான எஸ்போலா தனது எட்டாம் வயதில் திருமணம் முடித்த நிகழ்வு வரலாற்றில் பதிவாகியுள்ளது. (http://muslimvilla.smfforfree.com/index.php...https://liguopedia.wordpress.com/.../19/agnes-de-france/...). ஆனால் இவர்கள் கற்பனை செய்வது போன்று நபியவர்களின் திருமண நிகழ்வு நடைபெறவில்லை என்தே யதார்த்தமாகும்! تقدم

யூத சமூகத்தினரான பனு குரைழா படுகொலையும், பலப்பிரயோகமும் மனிதாபிமானமற்ற செயலாக கருதப்படவில்லையா?

யூத சமூகத்தினரான பனு குரைழா, உடன்படிக்கையை மீறி, இணைவைப்பாளர்களுடன் இணைந்து முஸ்லிம்களை அழிப்பதற்கு கூட்டுச்சேர்ந்தார்கள். இந்த தூரோகச் செயல் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. எனவே அவர்களின் ஷரீஆவின் -மத சட்டதிட்டத்தின்-அடிப்படையில் துரோகம் மற்றும் உடன்படிக்கை மீறலுக்கான தண்டணை அமுல்படுத்தப்பட்டது. இதனை நபியவர்கள் அவர்களின் உடன்பாட்டின் அடிப்படையில் நிறைவேற்றினார்கள். அதாவது அவர்களிடமே இந்த விவகாரம் குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு ஒருவரை நியமிக்குமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்கள் நபித்தோழர் ஒருவரை நியமித்தார்கள். அவர் இந்த விவகாரத்தில் அவர்களின் மதச்சட்டம் குறிப்பிடும் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார். அதனடிப்படையிலேதான் இத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. (தாரீகுல் இஸ்லாம் : (2:307-318)). تقدم

இன்றைய ஐக்கிய நாட்டுச்சபையின் சட்டவிதிகளில் துரோகிகள், உடன்படிக்கை மீறுவோருக்கான தண்டனை என்ன? ஒரு குழு உம்மையும், உமது குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து உமது செல்வத்தை அபகரிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளனர் என வைத்துக்கொண்டால் நீ அவர்களுக்கு என்ன செய்வாய்? பனு குரைழா யூதர்கள் உடன்படிக்கை முறித்து, முஸ்லிம்களை துவம்சம் செய்ய இணைவைப்பாளர்களுடன் கூட்டுச்சேர்ந்தனர். இந்நிலையில் தம்மை பாதுகாத்துக்கொள்ள முஸ்லிம்கள் எதை செய்ய வேண்டியிருக்கும்? இவ்விவகாரம் தொடர்பாக முஸ்லிம்கள் செய்தவை சாதாரண மனிதப்புத்தியும் ஏற்கக்கூடிய தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு நடவடிக்கையாகும்.