Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இருப்பியலின் அடிப்படைக் கோட்டுபாடுகள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு :

இயற்கைத் தேர்வுக்கோட்பாடு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது? تقدم

இயற்கைத் தேர்வுக்கோட்பாட்டை (ஒரு பகுத்தறிவற்ற இயற்பியல் செயல்முறை) என்றும் ஒரு தனித்துவமான புத்தாக்கப் படைப்பு சக்தியாகக் கருதும் சில டார்வினிஸ்டுகள், எந்தவொரு உண்மையான அனுபவ அடிப்படையும் இல்லாமல் அனைத்து கடினமான பரிணாமச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு தனித்துவம் நிறைந்த புத்தாக்க சக்தியாக கருதுகின்றனர். இதனடிப்டையில் பாக்டீரியா உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டில் உள்ள வடிவமைப்பின் சிக்கலான தன்மையை அவர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். அவர்கள் 'ஸ்மார்ட்' பாக்டீரியா, 'நுண்ணுயிர் நுண்ணறிவு', 'முடிவுகாணுதல்-(முடிவெடுத்தல்)' மற்றும் 'சிக்கல் தீர்க்கும் பாக்டீரியா' போன்ற சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், பாக்டீரியா அவர்களின் புதிய கடவுளாக மாறியது. (theism a giant leap of faith Dr. Raida Jarrar).

இயற்கைத் தேர்வுக் கோட்பாடானது குறிப்பிடும் பாக்டீரியா நுண்ணறிவின் செயற்பாடுகள் யாவும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வின் நுண்ணறிவு மற்றும் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதை படைப்பாளனான அல்லாஹ் தனது வேதத்தினூடாகவும் தனது தூதரினூடாகவும் தெளிவு படுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான் :

"அல்லாஹ்வே அனைத்துப்பொருட்களினதும் படைப்பாளனும் யாவற்றிற்கும் அவனே பொறுப்பாளனுமாவான்". (அஸ்ஸுமர் : 62). تقدم

"அவனே ஏழு வானங்களையும் தட்டுத் தட்டாகப் படைத்தான். மகா கருணையாளனான அவனின் படைப்பில் நீ எவ்விதக் குறைபாட்டையும் காணமாட்டீர். அவ்வாறாயின் உனது பார்வையை அதனை நோக்கி செலுத்துவீராக அவற்றில் ஏதேனும் பிளவுகளை காண்கிறீரா?". (அல் முல்க் :3). تقدم

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

"நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் குறிப்பிட்ட விதிமுறையின் படியே படைத்துள்ளோம்" (அல் கமர் : 49). تقدم

வடிவமைப்பு, துல்லியமான கட்டுப்பாடு, குறியிடப்பட்ட மொழி, நுண்ணறிவு, உள்நோக்கம், சிக்கலான அமைப்புகள், ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள விதிகள் போன்ற மற்றும் பல சொல்லாடல்களும் பிரயோகங்களும் நாத்திகர்ளைப் பொருத்தவரை இயற்கை தேர்வுக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதிருந்தும் இவ்வுலக உருவாக்கம் தற்செயலனவை, சடுதியானவை என்ற கருத்தியலுக்கு இட்டுச்சென்றது. மதத்திலிருந்திருந்தும் ,படைப்பாளனின் இருப்புக்குறித்த நம்பிக்கையிலிருந்தும் தப்பிக்கும் பரிதாபமான முயற்சிகளில் ஒன்றாக விஞ்ஞானிகள் படைப்பாளனுக்கு பல் வேறு பெயர்களைக் குறிப்பிடுகின்றனர் அவற்றுள்; (இயற்கைத் தாய், பிரபஞ்சத்தின் விதிகள், டார்வினின் இயற்கைத்தேர்வுக் கோட்பாடு போன்றவை அவற்றுள் சிலவையாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

"இவைகள் வெறும் பெயர்களே தவிர வேறில்லை, நீங்களும், உங்கள் மூதாதையர்களுமே அவற்றைச் சூட்டிக்கொண்டீர்கள். அதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரத்தையும் இறக்கி வைக்வில்லை. அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனவிருப்பத்தையுமே பின்பற்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கிறது". (அந்நஜ்ம் : 23). تقدم

உண்மையில் 'அல்லாஹ்' என்ற பெயரை அல்லாது மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்துவதானது அவனின் முழுமையான பண்புகளில் சில நீங்கிவிடவும், பல்வேறுபட்ட சர்ச்சைக்குரிய கேள்விகள் தோன்றவும் காரணமாக அமைந்து விடும். உதாரணத்திற்கு :

அல்லாஹ்வை நினைவு கூறுவதை தவிர்ப்பதற்கு சர்வதேச ரீதியாக சட்டங்கள உருவாக்கப்பட்டு, அவர்களின் நம்பிக்கையின் படி தற்செயலாக தோன்றிய இயற்கையான விதிகளுக்கு உட்பட்டதான சிக்கலான அமைப்புக்களும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. இறுதியில் மனிதனின் புத்திக்கூர்மை மற்றும் அவனது அபூர்வமான திறமைகள் எவ்வித அடிப்படையுமற்ற முட்டால்தனமான, குருட்டுத்தனமான ஒரு அடிப்படையின் பால் இணைக்கப்படுகின்றன.

மனிதன் அடிப்படை குரங்குகள் என்ற கருத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்? (அதாவது மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?)

இஸ்லாம் இந்தக் கருத்தை முழுமையாக மறுக்கின்றது, மனிதனை கண்ணியப்படுத்தி இந்தப்பூமியின் இறை பிரதிநிதியாக அவனை ஆக்குவதில் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வின் உயரிய நோக்கை நிறைவேற்றுவதற்காக ஆதாமை ஏனைய எல்லாப் படைப்பினங்களிருந்தும் தனித்துவமாகப் படைத்து வேறுபடுத்தினான் என அல்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.

டார்வின்வாதிகள் படைப்பாளனை விசுவாசிக்கும் -நம்பும் - விசுவாசியை அவன் நேரில் காணாத ஒன்றை நம்புகிறான் என்பதற்காக அவனை ஒரு பிற்போக்குவாதியாக கருதுகின்றனர். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனைப் பொருத்தவரை அவன் தனது அந்தஸ்தையும் கௌரவத்தையும் உயர்த்தி மேலோங்கச் செய்யக்கூடிய ஒன்றையே விசுவாசம் கொண்டுள்ளான். அவர்களே தனது நிலையையும் அந்தஸ்த்தையும் குறைத்து தமது நிலைகளை தாழ்த்திக்கொள்ளக்கூடிய ஒன்றை நம்புகின்றனர். இவர்களின் நம்பிக்கை எவ்வாறாக இருந்தாலும் தற்போது வாழும் குரங்குகள் மனிதனாக மாறி விருத்தியடையாதது ஏன்? என்ற கேள்வி இக்கோட்பாடு சார்ந்தோரிடம் முன்வைக்கப்படுகிறது. இதற்கான பதிலை இன்னும் அவர்களால் கூற முடியவில்லை!

இக்கோட்பாடு சில கருதுகோள்களின் தொகுப்பாகும், மேலும் இந்த கருதுகோள்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நேரடியாக பார்ப்பதன் மூலமும் அல்லது ஒரு குறிப்பிட்ட புறவயமான ஒன்றை குறித்து ஆழ்ந்து சிந்திப்பதன் மூலமும் நிகழ்கிறது, மேலும் இந்த கருதுகோள்களை நிரூபிப்பதற்கு அதி சிறந்த சோதனைகள் அல்லது கருதுகோளின் உண்மைத் தன்மையை சான்றாகவைத்து நேரடி அவதானிப்பும் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால்; இந்தக் கோட்பாட்டுடன் இணைந்தாக கருதப்படும் கருதுகோள்களில் ஒன்றை ஆய்வு மூலமோ அல்லது நேரடி அவதானிப்பு மூலமோ நிரூபிக்க முடியாத போது இக்கோட்பாட்டையே முழுமையாக மறுபரீசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

அறுபதுனாயிரம் (60000) ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், அந்த கோட்பாடு அர்த்தமுள்ளதாக இருக்காது. அத்துடன் இக்கோட்பாட்டாளர்களின் விதிகளின் படி நாம் அவற்றை நேரடியாகப் பார்த்து அவதானிக்காததன் காரணத்தினால் இவர்களின் இந்த வாதத்தை ஏற்பதற்கான எந்த அடிப்படையும் கிடையாது. சமீபகாலத்தில் சில பறவை இனங்களின் சொண்டுகளில் வடிவமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை பறவைகளாகவே தொடர்ந்தும் உள்ளன. என்றாலும் இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பறவைகள் இன்னொரு வடிவாக மாறவேண்டுமே! ஆனால் அவை அதற்கே உரிய இயல்பூக்கத்துடனே வாழ்கின்றன என்பதே உண்மையாகும். 'அத்தியாயம் 7: ஓல்லர் மற்றும் ஓம்டால்.' மோர்லேண்ட், ஜே.பி. தி கிரியேஷன் ஹைபோதெசிஸ்: சயின்டிஃபிக்

உண்மையில் மனிதனின் உருவாக்கத்தின் அடிப்படை குரங்கு அல்லது குரங்கின் பரிணாம வளர்ச்சியின் முடிவு என்ற கருத்தானது ஒருபோதும் டார்வினின் கருத்தல்ல. ஆனால்; மனிதனும் குரங்கும் பொதுவான அறியப்படாத ஒரே அடிப்படையைக் கொண்டுள்ளன. அது தற்போது "அழிந்து போன உயிர் வட்டம்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அதன்படி இதற்கென உயிரியல் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து அது மனிதனாக மாற்றம் பெற்று விட்டது. முஸ்லிம்கள் டார்வினின் கூற்றை முழுமையாக நிராகரித்தாலும் சிலர் நம்புவதுபோல் குரங்கு மனிதனின் பாட்டன் என்று அவர் குறிப்பிடவில்லை. இத்தத்துவத்தை –கோட்பாட்டை– டார்வின் உருவாக்கினாலும் அவரிடம் இக்கோட்பாடு குறித்து பல சந்தேகங்கள் இருப்பதை அவர் தனது தோழர்களுக்கு எழுதிய கடிதங்களில் நிரூபித்துள்ளதுடன் அதற்கான வருத்தங்களையும் தெரிவுத்துள்ளார் என்பதே உண்மையாகும். ('அத்தியாயம் 7: ஓல்லர் மற்றும் ஓம்டால்.' மோர்லேண்ட், ஜே.பி. தி கிரியேஷன் ஹைபோதெசிஸ்: சயின்டிஃபிக்). - تقدم

டார்வின் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை நிரூபித்துள்ளார். ஆனால் அவரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டோரே, மனிதன் விலங்கின் தோற்றம் கொண்டவன் என்ற கருத்தை அவரின் கோட்பாட்டுடன் இணைத்து பிற்காலத்தில் குறிப்பிட்டனர். இக்கருத்தை கூறியோர் அடிப்படையில் நாத்திகவதிகளே!. (டார்வினின் வாழ்க்கை வரலாறு – லன்டன் பதிப்பகம் .கோலின்ஸ் 1958 பக்கம் 92-93). உண்மையில் முஸ்லிம்களைப் பொருத்தவரை அல்லாஹ் மனித இனத்தை கண்ணியப்படுத்தி இப்பூமியின் பிரதிநிதியாக ஆக்கியுள்ளான் என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகையால் இப்பிரதிநியானவர் ஒரு விலங்கின் தோற்றத்திலோ அல்லது அதனை ஒத்த நிலையில் இருப்பதுவோ அவனுக்கு எவ்வகையிலும் பொருந்தாத விடயமாகும்.